ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்
பாடியவர்: திரு. M.S.கோபாலகிருஷ்ணன்
எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்
————————————————————————–
நூல் கொண்ட பொம்மை நானே !
குருசாயி நாதன் கையில் !
நாள்தோறும் அவனே என்னை…
நடத்திடுவான் நேரிய வழியில் !
கோள் என்ன? நாள், திதி என்ன?
பாபாவின் துணைஎன் அருகில்…
(நூல் கொண்ட பொம்மை )
கல்லுடன் முள்ளும் சேர்ந்த
கடியதோர் பாதையைக் காட்டி…
சென்றிட வைப்பது போலேத்…
தோன்றிடும்…பயமில்லை அறிவாய் !
‘ஓம் சாயி’ மந்திரம் சொல்லி…
அவன் சொன்ன பாதை சென்றால்…
‘வெற்றி மாலை’ சேர்ந்திடுமே !
வாழ்வில் ஒளி வீசிடுமே !
(நூல் கொண்ட பொம்மை )
‘ஷீரடி பாபா’ என்று
கூறிடும் பக்தரை எல்லாம்…
ஓரிடம் சேர்ந்திட வைப்பான் !
புதியதாய் உறவு சமைப்பான் !
ஒன்றாகக் கூடிய அடியார் !
அவன் லீலை பேசி சிலிர்ப்பார் !
ஆனந்தத்தில் களித்திடுவார் !
அற்புதத்தில் திளைத்திடுவார் !
(நூல் கொண்ட பொம்மை )