ராகம்: சல்லாப் (எ) சூர்யா
———————————————-
சரவண பவனே ! சிவன் திருமகனே !
வரம்தரும் குகனே ! வா ! குருபரனே ! – உன்னை
நினைக்காத நாளெல்லாம் நாளில்லையே ! – எமக்
கருள்செய்ய உனையின்றி வேறில்லையே !
(சரவண பவனே !)
துயில் நீக்கும் சேவல் உன் கொடியானது !
இருள் நீக்கும் ஒளி உந்தன் விழியானது !
துயில் நீக்கும் சேவல் உன் கொடியானது !
இருள் நீக்கும் ஒளி உந்தன் விழியானது !
மயிலேறி வலம்போகும் திரு வடியானது !
அருள் வார்க்கும் காருண்யம் உளமானது !
மயிலேறி வலம்போகும் திரு வடியானது !
அருள் வார்க்கும் காருண்யம் உளமானது !
(சரவண பவனே !)
பூந்தென்றல் கூத்தாடும் குன்றங்களே !
திருச் செந்தில் ஆண்டவன் மன்றங்களே !
பூந்தென்றல் கூத்தாடும் குன்றங்களே !
திருச் செந்தில் ஆண்டவன் மன்றங்களே !
வடிவேலன் அடிசேரும் அடியார்களே !
குடிகொண்டான் வடிவேலன் நம் நெஞ்சிலே !
வடிவேலன் அடிசேரும் அடியார்களே !
குடிகொண்டான் வடிவேலன் நம் நெஞ்சிலே !
(சரவண பவனே !)