அகவல் சொன்னால்…

அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத்
தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே !
அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல‌
சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !

மரத்தடியும் ஆலயம் !

மரத்தடியும் ஆலயம் ! மலைக்கோட்டையும் ஆலயம் !
அரசன் மனமும் ஆலயம் ! ஆண்டி மனமும் ஆலயம் !