வார்த்தாளி ! வாராகி !

வார்த்தாளி ! வாராகி ! தீர்ப்பாளே வினையெல்லாம்…
தூள்தூளாய் பொடியாக்கியே ! – அவள்
பார்த்தாலே போதும்  பார்விட்டு பகை ஓடும்
பார்க்கின்ற நொடிப்போதிலே…

மனசெல்லாம் வாராகி

உந்துதலைத் தந்திடவே உருவானவள் !
பன்றி தலை பெண் உடலும் வடிவானவள்  !
சந்திரனும் சூரியனும் விழியானவள் !
சரண் என்று வந்தவர்க்கு கதியானவள் !