கற்பகத்தானைக் கேளுங்க !

நாட்டுக்கோட்டை நகரத்தாரு…நாடும் பிள்ளை யாருங்க?
வேண்டும் பிள்ளை யாருங்க? போற்றும் பிள்ளை யாருங்க?

அகவல் சொன்னால்…

அகவல் சொன்னால் பக்தியுடன் அனுதினமே ! – நல்லத்
தகவல் வரும் நம்மைத் தேடி சீக்கிரமே !
அக மகிழ்ந்து அருள்தருவான் பிள்ளையாரப்பன் ! – நல்ல‌
சுகம் கொடுத்து வாழவைப்பான் பிள்ளையாரப்பன் !