ஆல்பம்: ஷீரடி சாய் நாதம்
பாடியவர்: திரு. ராகுல்
எழுதியவர்: பி.ஸ்ரீதேவிபிரசாத்
————————————————————————–
வேப்ப மரத்தடியிலே தோன்றி வந்த வேந்தனே !
வேதனைகள் தீர்த்தருளும் வைத்யநாதனே !
கற்பகமே ! கண் கலங்கி மெய் சிலிர்க்கும்….!
அற்புதமான உன் லீலைகளைக் கேட்டிடவே !
———
ஈரேழு ஆண்டாக…
கடும் வயிற்று வலியாலே…
பெரும் இன்னல் உற்றாரே தத்தோபந்த் என்பாரும் !
ஈரேழு உலகாளும் சாயீசனே !
உன் திருக் கரத்தாலே… உதி தந்து வலி தீர்த்தாய் !
உன் மகிமை போற்றி ! போற்றி !
————
ஊருக்குப் பொதுவான…
தானியக் கிடங்கினிலே..
தீவிபத்து நிகழுமென முன்கூட்டியே அறிந்தாய் !
சீரான வழிகாட்டும் குருநாதனே !
சிறிதளவு நீர்தெளித்து…பெருந்தீயை அணைத்தாயே !
உன் லீலை போற்றி ! போற்றி !
————
சோதிக்க வந்தவனை
அவன் தந்தைக் குரலினிலே…
ஏன் வந்தாய் எனக் கேட்க…நிலை குலைந்து போனானே !
ஜோதிவடிவானவனே…ஜகன்நாதனே !
உன் திருவுளத்தால்… பிழை பொறுத்து அருள் கொடுத்தாய் !
உன் கருணை போற்றி ! போற்றி !
———–